அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு விடுக்கப்பட்ட அறைகூவல்!
sri lanka
jaffna
protest
government
peoples
northern province
By Kalaimathy
நாட்டில் அதிகரித்துள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்தும் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கவும் மக்கள் முன்வருமாறு கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றது.
கவனயீர்ப்பு போராட்டம் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
அதன் போது மண்ணெண்ணெய், பெற்றோல், சமையல் எரிவாயு, பாண் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை கண்டித்து போராட்டம் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர் .
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 14 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்