இரட்டிப்பாகும் அதிர்ஷ்டலாபசீட்டு கட்டணம்
எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அதிர்ஷ்டலாபசீட்டு ஒன்றின் விலையை 20 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை அதிர்ஷ்டலாபசீட்டு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கிரிஷாந்த மரம்பகே தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த கட்டண உயர்வுக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொமிஷன் அதிகரிப்பு
இதேவேளை, அதிர்ஷ்டலாபசீட்டுகளின் விலை அதிகரிக்கப்பட்டால், ஒரு அதிர்ஷ்டலாப சீட்டுக்கான விற்பனை முகவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 3.75 ரூபா கொமிஷன் 8 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்.” என கிருசாந்த குறிப்பிட்டார்.
மேலும் கொமிஷன் தொகையை எட்டு ரூபாயாக அதிகரிக்காவிட்டால் அதிர்ஷ்டலாப சீட்டுகளை விற்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
