காமினி லொகுகேவின் சாரதி படுகொலை விவகாரம்- பிரதான சந்தேக நபர் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்!
சிறிலங்கா வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை இன்று காலை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவரைக் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று இரவு 8.00 மணியளவில் அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி பிலியந்தலை மாவிட்ட பகுதியில் உள்ள சாரதியின் வீட்டிற்கு முன்பாக வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கத்திக்குத்து தாக்குதலில் பலத்த காயமடைந்த அமைச்சரின் சாரதி பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தனிப்பட்ட பகையின் காரணமாகவே அமைச்சரின் வாகன சாரதி நேற்று தாக்கிக் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.