பின்னோக்கி நகரும் இலங்கை - உலப்பனே சுமங்கல தேரர் ஆதங்கம்
உலகம் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது மாணவர்களின் கல்வி உரிமை இல்லாமலாக்கப்பட்டுள்ளதால், இலங்கை பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்கிறார் அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு எதிரான தேசிய ஒன்றிணைப்பின் ஒருங்கிணைப்பாளர், உலப்பனே சுமங்கல தேரர் (Ulappane Sumangala Thero).
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி நூறு நாட்களுக்கும் அதிகமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களைக் காட்டிக் கொடுத்து திங்களன்று அதிபர் , ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமுகமளிப்பார்களாயின் இனி எந்தவொரு ஆட்சியாளர்களிடமிருந்தும் இதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று சூளுரைத்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்தரைத்த அவர், நாட்டில் தற்போது கல்வி உரிமை பறிக்கப்பட்டு எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளமையே குடிவரவு - குடியகழ்வு திணைக்களத்திற்கு முன்னாள் கடவுச்சீட்டினைப் பெற்றுக் கொள்வதற்காக காணப்படும் நீண்ட வரிசைக்கான காரணம் ஆகும்.
இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையே இந்த வரிசைக்கு காரணமாகும்.
எனவே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் வரை பாடசாலைகளுக்கு சமூகமளிக்க கூடாதென அவர் கூறியுள்ளார்.