கடற்படையினரால் 59 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு
மன்னாருக்கு தெற்கே கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இலங்கை கடற்படையினர் சுமார் 197 கிலோ 60 கிராம் (ஈரமான எடை) எடையுள்ள கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான பல பொதிகள் அலைந்து திரிவதை அவதானித்ததன் பின்னர் இந்த போதைப் பொருட்களை மீட்டுள்ளனர்.
ரோந்து நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட 02 சாக்குகளில் இருந்த இந்த 50 பொதிகளில் சுமார் 197 கிலோ 60 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சா இருந்தது.
கடத்தல்காரர்கள் கடற்படையினரின் பிரசன்னத்தின் விளைவாக கேரளா கஞ்சாவை கடலில் இறக்கிவிட்டு கரைக்கு கொண்டு வர முடியாமல் தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ. ரூ. 59 மில்லியன் என கடற்படையினர் தெரிவித்தனர்