சிறிலங்காவின் புதிய அதிபர் தொடர்பில் நாடாளுமன்றம் வெளியிட்ட விசேட அறிக்கை!
Parliament of Sri Lanka
President of Sri lanka
Sri Lankan political crisis
By Kanna
எதிர்வரும் ஜூலை 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் ஊடாக புதிய அதிபர் தெரிவு செய்யப்படுவார் என இலங்கை நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு நாடாளுமன்றம் இதனை அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 19ம் திகதி அதிபருக்கான வேட்பு மனு கோரப்படவுள்ளதுடன், புதிய அதிபருக்கான வாக்கெடுப்பை அடுத்த தினமே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே சபாநாயகர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளதாக நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி, சிறிலங்காவின் பதில் அதிபர் நியமனம் தொடர்பில் சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
மரண அறிவித்தல்