அரச தலைவர் வேட்பாளராக மொட்டுக்கட்சி முன்மொழிய இருக்கும் முக்கிய நபர்!
அரச தலைவர் வேட்பாளராக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் பெயரை முன்மொழிய சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளதுதாக தென்னிலங்கை ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மற்றைய கட்சிகளின் நிலைப்பாடு
இதேவேளை, புதிய அரச தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் முன்மொழிய மற்றைய கட்சிகள் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான விஷேட கலந்துரையாடல் நேற்று (10) பிற்பகல் நுகேகொடையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரலவின் வீட்டில் நடைபெற்றதாகவும் தெரிவிப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான சுயேச்சைக் குழு உட்பட பல கட்சிகள் இதில் கலந்துகொண்டதாவும் தெரிய வந்துள்ளது.
தொடர்புடைய செய்தி, 09 ஆவது நிறைவேற்று அரச தலைவர் யார் -சஜித் -டலஸ் கடும் போட்டி