விரைவான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இலங்கையின் நிலைமை மேலும் மோசமாகிவிடும்!
இலங்கையின் நெருக்கடி நிலைமைக்கு உதவும் வகையில் 13 மில்லியன் குரோன் நிதி உதவியை வழங்குவதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள உணவு மற்றும் போஷாக்கு நெருக்கடி குறித்து நோர்வே கவலை கொண்டுள்ளதாகவும் நோர்வே வெளிவிவகார அமைச்சர் என்னிகன் குய்ட்ஃபெல்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கையில் ஏற்பட்டுள்ள உணவு மற்றும் ஊட்டச்சத்து நெருக்கடி கடுமையான மனிதாபிமான சூழ்நிலை பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான பதில் திட்டத்தை உருவாக்கிய ஐக்கிய நாடுகள் சபை
இந்நிலையில் கடுமையான தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் நோர்வே 13 மில்லியன் குரோனை வழங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி விரைவான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் மாதங்களில் இலங்கையின் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனை கருத்திற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபை, மனிதாபிமான பதில் திட்டத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
The grave humanitarian situation in #SriLanka has a severe impact on women & children.
— Norway MFA (@NorwayMFA) August 2, 2022
Norway provides NOK 13 million to support @UN's efforts for food security & protection. It will help the acute need for food, nutrition & protection.
-FM @AHuitfeldt
➡️https://t.co/Z2Tfbf76OS pic.twitter.com/XaQrCQC0rX
இதற்கமைய பாதிக்கப்படக்கூடிய குழுக்களை இலக்காகக் கொண்ட உலக உணவுத் திட்டத்திற்கு 5 மில்லியன் குரோன்களையும், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்துக்கும் சனத்தொகை அமைப்புக்கும் 8 மில்லியன் குரோன்களையும் நோர்வே வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை எதிர்த்துப் போராடுவதற்கும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்கும் நோர்வே முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.