ராஜபக்ஷக்களுக்கு எதிரான கோசங்களுடன் புதுவருட தினத்திலும் வீதியில் மக்கள்!
நுவரெலியா வெலிமட வீதியில் மத்திய சந்தைக்கு முன்னால் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நுவரெலியா வாழ் மக்களின் ஏற்பாட்டில் பாற் சோறு சமைத்து பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
நேற்றைய தினம் புதுவருட தினத்தை முன்னிட்டே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர்.இராஜாராம், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா அமைப்பாளர் திணேஷ் கிருசாந்த, நுவரெலியா மாநகர சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களான என். விஸ்ணுவர்தன், மஹிந்ததாஸ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த எதிர்ப்பு போராட்டத்தின் போது கோட்டாபய ராஜபக்ஷ. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ உடனடியாக அரசாங்கத்தை விட்டு விலகவேண்டும், இவர்கள் திருடிய பணத்தை வழங்க வேண்டும் என பதாதைகள் ஏந்தியவாறு கோசமிட்டனர்.
பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, குழந்தைகளுக்கு பால் மா இல்லை, உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சாரம் இல்லை இவ்வாறான சூழ் நிலையில் புது வருட பண்டிகையை எவ்வாறு குடுபத்துடன் வீட்டில் கொண்டாடுவது.
இதனாலே இன்று வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகின்றோம் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.