யாழ் நல்லூரில் இன்று திறக்கப்பட்ட எதிர்க்கட்சியின் பிரதான அலுவலகம்!
உள்ளூராட்சி தேர்தலுக்காக அனைத்து உறுப்பினர்களும் தமது கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தொகுதிக்கான பிரதான அலுவலகம் இன்றைய தினம் நல்லூரில் திறந்து வைக்கப்பட்டது.
இன்றையதினம், (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம், நல்லூர் செட்டித்தெரு பகுதியில் குறித்த அலுவலகம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரணவால் திறக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளருமான உமாச்சந்திரா பிரகாஷ், யாழ் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அமைப்பாளர் விஜய்காந்த், யாழ் மவட்ட அமைப்பாளர் கு.மதன்ராஜ், யாழ்ப்பாண தொகுதி பிரதம அமைப்பாளர் ஜெயேந்திரன்,
தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவ தியாகேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
