கோட்டாபயவை மக்கள் மத்தியில் சென்று பேச சொல்லுங்கள் பார்ப்போம்- தமிழ் எம்.பி விடுத்துள்ள பகிரங்க சவால்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களை கடுமையாக சாடியுள்ளார்.
தைரியம் இருந்தால் மக்களுக்கு முன்னால் சென்று பேசுமாறும் அவர் சவால் விடுத்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போதே அவர் ஆளும் கட்சியினரை கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நீங்கள் மக்களுக்கு முன்னால் சென்று பேசுங்கள். அரச தலைவரை மக்கள் மத்தியில் சென்று பேச சொல்லுங்கள். இங்கு வந்து பொய்யாக சத்தமிட வேண்டாம். பொய்க்கு கூச்சலிடமால் அமைதியாக இருங்கள்.
சிங்கள மக்கள் மத்தியில் சென்று பேசுமாறு அரச தலைவரிடம் கூறுங்கள். இங்கு வந்து பொய்க்கு சத்தமிட வேண்டாம். உங்களை போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே நாட்டை அழித்தனர். அதனாலேயே மக்கள் வீதியில் இருக்கின்றனர்.
எமது மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் வீதியில் இருக்கின்றனர். நீங்கள் சத்தமிடாமல் இருங்களேன் ஐயா. இவர்களை போன்ற நபர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களே துக்கத்தில் இருக்கின்றனர் எனவும் தெரிவித்தள்ளார்.
பொருட்களை விலை கொடுத்து வாங்க முடியவில்லை. பால் மா இல்லை. அரிசி இல்லை, பெட்ரோல் இல்லை, வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. எரிவாயு இல்லை. எரிவாயு வெடிக்கின்றது. இவர்கள் மக்களுக்கு முன்னால் சென்று பேச வேண்டும்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக்கொண்டு வெறுமனே சத்தமிட வேண்டாம். முடிந்தால், கிராமங்களுக்கு சென்று கூட்டத்தை நடத்தி பேசி பாருங்கள். இங்கு வந்து பொய்யாக சத்தமிட்டுக் காட்ட வேண்டாம்.
அரச தலைவர் பின்னால் இருக்கின்றார் என்பதற்காக இங்கு வந்து பொய்யாக சத்தம் போட வேண்டாம். உங்களுக்கு வாக்களித்த மக்களிடம் போய் கேளுங்கள் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று.
எமது மக்களுக்கு நாங்கள் நன்றாக சேவை செய்கின்றோம். எப்படி வேலை செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். சத்தமிடாமல் சும்மா இருங்கள் என நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.