நாடாளுமன்றில் பொதுஜன பெரமுன-சுதந்திர கட்சிக்கிடையில் வெடித்தது பிரச்சினை!

parliament podujana peramuna sri Lanka sri Lanka freedom party maithribala sirisena
By Kalaimathy Nov 26, 2021 07:27 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

நாடாளுமன்றில் ஆளும் பங்காளி கட்சிக்கிடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வு இன்று காலை ஆரம்பமாகி சிறிது நேரத்தில் பொதுஜன பெரமுனவுக்கும், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலளிக்க வேண்டும் எனக் கூறி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க (Roshan Ranasinge), சபாநாயகரிடம் 7 நிமிட நேரத்தை பெற்றுக்கொண்டார்.

அதனையடுத்து, தான் கூறிய அவதூறு ஒன்றை கேட்டு, அமைச்சர் அளுத்கமகே உரை ஒன்றை நிகழ்த்தியதாக மைத்திரிபால சிறிசேன நேற்று கூறியிருந்தமைக்கு பதிலளித்து ரொஷான் ரணசிங்க உரையாற்றினார்.

எனக்கு அவதூறு பழக்கம் கிடையாது. அவர்களுக்கே அவதூறு கூறும் பழக்கம் இருக்கின்றது. நான் எதனை கூறினாலும் அதனை நேரிடையாக கூறுவேன் என ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தான் காலையில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து, மாலையில் அவர்களை ஒன்று கூட்டி  சுதந்திரக் கட்சியின் கிளையை அமைப்பதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கூறியதாகவும் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் அவதூறை கேட்டே அவர் அப்படி கூறியதாகவும் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) நேற்று கூறியிருந்தார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ரொஷான் ரணசிங்க,

பொலன்நறுவையில் வீழ்ச்சியடைந்துள்ள சுதந்திரக் கட்சியின் வேலைத்திட்டங்களை மறு உருவாக்கம் செய்வதற்காக சிறிசேன, விவசாயிகளின் பிரச்சினை மற்றும் பராக்கிரம சமுத்திரத்தின் நடைபாதை பிரச்சினை பிடித்துக்கொண்டார். சேதனப் பசளை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பது அமைச்சரவை எடுத்த கூட்டு தீர்மானம்.

அமைச்சரவையில் சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் மகிந்த அமரவீர போன்றவர்களும் இருக்கின்றனர். சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன் இருக்கின்றது. அந்த கட்சியை சேர்ந்த ஓரிருவர் அரசாங்கத்தை விட்டு வெளியேறினால், அரசாங்கத்திற்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது என ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண(Lasantha Alagiyawanna), மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் இருக்கும் போது இந்த கதையை கூறியிருந்தால், அது நெறிமுறையாக இருந்திருக்கும்.

இப்படியான கதையை கூற போவதாக முன்னதாகவே கூறியிருந்தால், மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்திற்கு வந்திருப்பார். ஆளும் கட்சியினர் தொடர்ந்தும் மைத்திரிபால சிறிசேன மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அப்போது ஆசனத்தில் இருந்து எழுந்த ரொஷான் ரணசிங்க, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கு நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள் குறித்து நன்று தெரியும் எனவும் அவையில் இருக்கும் நேரத்தில் தன்னை பற்றி கூறுவதை நெறிமுறையற்றது என்பதை அவர் அறிவார் எனவும் கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
மரண அறிவித்தல்

உடப்புசல்லாவ, சிட்னி, Australia

11 May, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திருகோணமலை

13 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வியாபாரிமூலை, தெஹிவளை

16 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

28 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, கொழும்பு

16 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

15 May, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் நகரம், நல்லூர்

13 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சென்னை, India

14 May, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023