நாடாளுமன்றில் களேபரம்- ஆளும்தரப்பு எம்.பி மீது தாக்குதல் முயற்சி!
attack
opposition
podujana peramuna
sri Lanka
pariament
By Kalaimathy
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி மீது எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்தமையால் நாடாளுமன்றில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நாடாளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய போது, களேபரமான நிலைமை ஏற்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, சபைக்கு நடுவில் வந்து, திஸ்ஸ குட்டி ஆராச்சியை தாக்க முயற்சித்துள்ளார்.
அப்போது அந்த இடத்திற்கு சென்ற சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை தடுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியமை தொடர்பில் சபாநாயகர் அவரை எச்சரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாயுமான தலைவன்…!
2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்