நாடாளுமன்றில் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட ஆளும்-எதிர்தரப்பு உறுப்பினர்கள்!
சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றுக்கொண்டிருந்த போதே இந்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை, அந்நிய செலாவணி நெருக்கடி உள்ளிட்ட 11 கேள்விகளை நிதி அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பியிருந்தார்.
பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நிதி அமைச்சு எடுத்த நடவடிக்கை, பண வீக்கத்திற்கான காரணங்கள் மற்றும் பிற முக்கிய பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்காதமை காரணமாகவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் இடம்பெற்றது.
