நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சஜித் கோரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு, சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். தாக்குதல் குறித்து விரைந்து விசாரணை நடத்தி சந்தேக நபர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதுள்ள அரசியல் முறைமையினால்தான் தன்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது எனவும், அதனால் இதில் மாற்றத்தை ஏற்படுத்தாதவரை இவ்வாறான சம்பவங்களை தடுக்க முடியாது என உத்திக பிரேமரத்ன இன்று(19) நாடாளுமன்றில் தெரிவிக்கையிலேயே அவர், மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தன்மீது ஏற்பட்ட தாக்குதல் தொடர்பில் கருத்துரைத்த உத்திக பிரேமரத்ன மேலும் தெரிவிக்கையில்,
பின்ணனி
“என்மீது கடந்த 17ஆம் திகதி இரவு மர்ம நபர்கள் சிலரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவத்தை யார் செய்தார்கள் என்பதை விட, தற்போதுள்ள முறைமையினால்தான் தாக்குதல் நடத்தப்பட்டது என்று நான் நினைக்கிறேன், இந்த முறைமை தவறு என்று நாம் அனைவரும் அறிவோம், இந்த முறைமை தவறு என்பது நம் நாட்டு மக்களுக்கும் தெரியும்.
அத்துடன் நமது நாட்டின் சமூக அமைப்பு தவறாக உள்ளது .அரசியலும் தவறாக உள்ளது அதனால்தான் நாடு இன்று இந்த நிலைக்கு வந்துள்ளது.
அதனால் இவ்வாறான சம்பவங்களை தடுப்பதாக இருந்தால் எமது முறைமையை மாற்றவேண்டும். முறைமாற்றம் ஏற்படுத்தாமல் ஒருபோதும் இவ்வாறான சம்பவங்களை தடுக்க முடியாது.” என்றார்.
