நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்துள்ள மர்ம குழு- அச்சமடைந்துள்ள உறுப்பினர்கள்!
சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்து புகைப்படங்கள் காணொளிகளை எடுப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்றிற்குள் வருவதற்கு அச்சப்படுவதாகவும் முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத அந்நியர்கள் குழுவொன்று நாடாளுமன்ற வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத அந்நியர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து தொலைபேசியில் புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனால் சிலர் நாடாளுமன்றுக்குள் வருவதற்கு பயப்படுவதாகவும் எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை கவனத்திற்கொண்டு அந்த நபர்கள் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.