ரணிலை ஓரம்கட்டும் மகிந்தவின் புதிய திரைமறைவு காய்நகர்த்தல் - புலனாய்வுத் தகவல்!
பொதுஜன பெரமுனவுக்கும் ரணிலுக்கும் இடையில் பிளவு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பிளவடையக் கூடிய வாய்ப்பு உருவாகும் போது, ஆட்சி கவிழக்கூடிய நிலை ஏற்படும் என புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“ரணிலுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் ஆதரவு காணப்படுகின்றது. இதனால் அவரால் முன்வைக்கப்படும் எந்த பிரேரணையும் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.
மகிந்தவின் காய்நகர்த்தல்
ஆனால் தற்போது மகிந்தவும் காய் நகர்த்தல் ஒன்றை முன்னெடுக்கின்றார். அதன் முதல் கட்டமாக தனது இரண்டு தம்பிக்களையும் ரணிலிடமிருந்து விலக்கும் போராட்டத்தில் வெற்றி கண்டுள்ளார்.
இப்போது அவர் தனி ஆளாக உள்ளார். மகிந்தவிற்கு என்று ஒரு கூட்டம் உள்ளது. அதற்கு காரணம் அவர் போரை வெற்றி கொண்டவர். அந்த வெற்றி மாயை முடிந்தாலும் அதனை ஓரளவிற்கு புதுப்பிக்க கூடிய வாய்ப்பு உள்ளது.
பிளவுக்கு வாய்ப்பு
எனவே மொட்டு கட்சி மக்கள் மத்தியிலிருந்து முற்றுமுழுதாக தூக்கி எறியப்பட்டதாக நாங்கள் பார்க்க மாட்டோம். மொட்டு கட்சி நாடாளுமன்றில் இருப்பதால் ரணிலுக்கும் இவருக்கும் இடையில் பிளவு ஏற்பட வாய்ப்பு உண்டு” எனவும் அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
