துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி- அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Social Media
By Kalaimathy
நாடளாவிய ரீதியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவல்துறைமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கமைய நடமாடும் காவல்துறை ரோந்துப் பணியை அதிகரிக்குமாறும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடவும் வன்முறைச் செயல்களில் ஈடுபடவும் மக்கள் தூண்டப்பட்டு வருவதாக புலனாய்வு அமைப்புகள் ஏற்கனவே தெரிவித்துள்ளன.
எனவே குறிப்பிட்ட இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை ஏதேனும் கலவர நிலைமை ஏற்பட்டால் அதனைக் கட்டுப்படுத்த, தேவைப்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவுகளையும் அவர் வழங்கியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்