சர்ச்சையில் சிக்கிய காவல்துறை அதிகாரிகள்: வைரலாகியுள்ள காணொளி
காரொன்றில் பயணித்த இளைஞர்களை மறித்து, சோதனை செய்வதாக கூறி காவல்துறையினர், கஞ்சாவை வைக்க முயற்சித்ததாக இளைஞர்கள் குழு ஒன்று காவல்துறையினருடன் முரண்படும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதன் படி, குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் நேற்று (24) காலை வீதிக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் குழுவொற்று காரொன்றை மறித்து சோதனையிட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.
சோதனை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுமார் ஐந்து பேர் கொண்ட குழுவுடன் கொழும்பு - கிராண்ட் பாஸில் இருந்து வருகை தந்த காரை காவல்துறையினர் மறித்து சோதனையிட்டுள்ளனர்.
அதன் போது, குறித்த காரின் இருக்கையில் கஞ்சா விதைகள் போன்ற பல பொருட்கள் இருப்பதை அவதானித்ததாக தெரிவித்துள்ளனர்.
பிரச்சினை
எனினும், வாகனத்தில் இருந்த பணத்தை பார்த்த காவல்துறையினர், பணம் பறிப்பதற்காக காருக்குள் கஞ்சாவை வைக்க முயன்றதாக இளைஞர் குழு குற்றம் சுமத்தியுள்ளது.
ஆனால், இந்த இளைஞர்களின் குறச்சாட்டை மறுத்த தல்துவ, சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகள் இளைஞர்களை கட்டுக்கடங்காமல் நடந்து கொள்ள அனுமதித்ததில் தவறு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வருகைதந்த மூத்த அதிகாரி ஒருவர், இளைஞர்களுடன் உரையாடி பிரச்சினையை சுமூகமாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
