எங்களால் முடியும்! ரணிலுக்கு முன்னாள் அதிபர் சவால்
தோல்வியடைந்த ரணில், அதிபராக வர முடியும் என்றால், ஏன் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் எழுந்து நிற்க முடியாது என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரே நாடாளுமன்ற உறுப்பினராக வந்து, பிரதமராக தெரிவாகி, மூன்று வாரங்களில் அதிபராக வர ரணில் விக்ரமசிங்கவுக்கு முடிந்துள்ளது என்றால், ஏன் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியாது?.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் மீண்டும் எழுந்து நிற்க முடியும். நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய விரைவில் ஏதாவது ஒரு தேர்தல் நடத்தப்படும் அடையாளங்கள் தென்படுகின்றன.
வேலை செய்ய தயாரில்லை
அடுத்த அரசாங்கத்தை அமைக்கக்கூடிய அதிகமான வாய்ப்பு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான கூட்டணிக்கே இருக்கின்றது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டுக்காக இணைந்து வேலை செய்ய தயாரில்லை என்ற காரணத்தினால், அந்த கட்சியில் அங்கம் வகித்த 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரவும் சுயாதீனமாக செயற்படவும் நேரிட்டுள்ளது எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது போன்ற விரிவான மற்றும் பல செய்திகளை காண்பதற்கு முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்