கோட்டாபய மற்றும் பசில் நாட்டை விட்டு வெளியேற இந்தியா உதவியதா - உண்மையை வெளியிட்ட உயர்ஸ்தானிகராலயம்!
கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவி வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ராஜபக்ச சகோதரர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு தாம் உதவவில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்தியா மறுப்பு
மேலும் இவர்கள் நாட்டை விட்டு வெளியேற இந்தியா உதவியது என வெளியாகிய செய்திகள் ஆதாரமற்றவை என கூறி இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அத்துடன் ஜனநாயக வழிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பதுங்கியிருந்த கோட்டாபய
கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் மாளிகையில் இருந்து வெளியேறிய கோட்டாபய திருகோணமலை கடற்படை முகாமில் பதுங்கியிருந்த நிலையில், நேற்யை தினம் வெளிநாட்டிற்கு செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றபோது அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், இன்று அதிகாலை இராணுவ ஜெட் விமானத்தில் மாலைதீவுக்கு சென்றுள்ளார்.
இதேவேளை அமெரிக்காவிற்கு செல்லும் முயற்சியாக பசில் ராஜபக்சவும் இன்று நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
High Commission categorically denies baseless and speculative media reports that India facilitated the recent reported travel of @gotabayar @Realbrajapaksa out of Sri Lanka. It is reiterated that India will continue to support the people of Sri Lanka (1/2)
— India in Sri Lanka (@IndiainSL) July 13, 2022