இலக்கை அடைந்த பின்னரே பதவி விலகல் - வெளியானது அதிரடி அறிவிப்பு!
Gotabaya Rajapaksa
Sri Lanka
President of Sri lanka
By Kalaimathy
கோட்டாபய ராஜபக்ச தனது இறுதி இலக்கை அடைந்த பின்னரே தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்புவார் என அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை நேரப்படி இரவு 8 மணியளவில் கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பப்படும் என தெரியவருகின்றது.
இருப்பினும் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் அலுவலகம் இன்று காலை உறுதிப்படுத்தியுள்ளது.
சிறிலங்கா விமானப் படையின் விமானத்தில் நாட்டை விட்டு சென்ற கோட்டபாய ராஜபக்ச மாலைத்தீவை சென்றடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து கோட்டபாய ராஜபக்ச வேறு நாட்டுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.