சிறிலங்கா அதிபர் மற்றும் பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரிக்கிடையில் முக்கிய சந்திப்பு!
சிறிலங்கா அதிபருக்கும் பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரிக்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்றைய தினம் சிறிலங்கா அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிறிலங்கா வந்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா (Sahir Shamshad Mirza) இன்று சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை அதிபர் அலுவலகத்தில் சந்தித்தார்.
சிநேகபூர்வ சந்திப்பு
நட்பு நாடுகள் என்ற வகையில் சிறிலங்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலுள்ள நீண்டகால நெருங்கிய உறவை நினைவுகூர்ந்த சிறிலங்கா அதிபர், ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா உள்ளிட்ட குழுவினருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.
இச்சந்திப்பைக் குறிக்கும் வகையில் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா, ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கியுள்ளார்.
இதன் போது, அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பாகிஸ்தான் கடற்படையின் ரியர் அட்மிரல் அப்துல் பாஸித் பட் (Rear Admiral Abdul Basit Butt) உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.





