சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது இலங்கை
srilanka
red list
Bahrain
By Sumithiran
கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து கடந்த மே மாதம் 24ஆம் திகதி முதல் சிவப்பு பட்டியலில் இலங்கையை உள்ளடக்கிய பஹ்ரைன் தற்போது அதிலிருந்து நீக்கியுள்ளது.
இந்த நடைமுறை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக பஹ்ரைன் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 16 நாடுகள் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ளவர்கள் பஹ்ரைனில் தொழில் அனுமதியை பெற முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.