இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி அதிகரிப்பு!
இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக தேங்காய் அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருவாய் 21 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து சவால்கள்
முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளை சீர்குலைத்துள்ள மத்திய கிழக்கு பிராந்திய மோதல்களுக்கு தீர்வாக, மாற்று ஏற்றுமதி முறைகள் பின்பற்றப்பட்டதே இந்த வருமான அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்று தேங்காய் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

கடல்வழிப் போக்குவரத்து சவால்களுக்கு மத்தியிலும் ஏற்றுமதி அளவை சீராகப் பேணுவதற்காக, தேங்காய் மற்றும் இளந்தேங்காய்களை (செவ்விளநீர்) ஏற்றுமதி செய்ய விமான சரக்கு போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு ஏற்றுமதியாளர்கள் ஊக்குவிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்