தமிழ் மக்களுக்கு காத்திருக்கும் பேராபத்து - பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கவைக்கும் முயற்சி!
சிங்கள தேசத்தில் இளைஞர்கள் எப்போது எல்லாம் கிளர்ந்தெழுகிறார்களோ அப்போதெல்லாம் அந்த கிளர்ச்சி தமிழ் மக்கள் மீது திருப்பி விடப்பட்டுள்ளது என அரசியல் ஆய்வாளர் குணா கவியழகன் தெரிவித்துள்ளார்.
அதற்காக மதமும், மொழி உணர்வும் கிண்டிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழ் அரசியல்வாதிகள் தமது அரசியல் செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக மொழி அரசியலையும், மத அரசியலையும் கையாண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே மக்கள் இதற்குப் பலியாகிடக் கூடாது. மீண்டும் மீண்டும் பலியாக முடியாது எனவும் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் நிலவும் பஞ்சம் உறுதியானால் அதற்குரிய ஏற்பாடுகளில் ஒன்றாக மதப்பிரச்சினையையே அதிகளவில் பயன்படுத்த முனைவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், சிறிலங்கா அரசாங்கம் புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சுவாத்தை நடத்தப்போவதாகவும், புலம்பெயர் அமைப்புக்களுக்கான செயலகங்களை அமைக்கப்போவதகவும், சில மாதங்களில் அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று கூறுகின்றது.
போராட்ட மனோபாவத்தில் இருக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள்

ஆகவே அரசாங்கத்திற்கு இந்த பஞ்சத்தை நிறுத்துவது ஒரு பெரிய விடயம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவ்வாறு செய்யாது இந்த விடயங்களை பற்றியெரிய வைப்பதற்கான முயற்சிகளை எடுப்பதன் மூலமே சிறிலங்கா அரசாங்கம் இந்த திட்டத்தை கையாள முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் உண்மையானதா இல்லையா என்பதை உறுதியாக கூற முடியாவிட்டாலும் இந்த நிலைமையை நிச்சயமாக கொண்டுவருவார்கள் என்பது உறுதி எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் தமிழ்த் தலைவர்கள் எல்லாம் ஏதோவொரு வகையில் போராட்ட மனோபாவத்திலேயே இருக்கின்றனர். ஆகவே இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டு நாம் முன்னேற வேண்டியிருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே தமிழ் மக்களுக்கு ஓர் ஆபத்து இருக்கின்றது. அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் தெரிந்தே இதற்குள் நின்றால் தப்பிக்க முடியாது.
இருப்பினும் இந்த திட்டங்கள் தெரியாது இதற்குள் நின்றால் இது தொடர்பில் கவனம் எடுக்க வேண்டும். மக்களை அணிதிரட்டிக்கொண்டு சென்று அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் விழுத்தாது கவனமாக செயற்பட வேண்டும் எனவும் முன்னெச்சரிக்கைத் தகவல் ஒன்றையும் தெரிவித்துள்ளார்.