எரிவாயு விநியோகம் வழமைக்கு! மூன்று நாட்களுக்கு ஒருமுறை வரவுள்ள கப்பல்கள்
இலங்கைக்கு தொடர்ந்து வழக்கத்தை போலவே எரிவாயு விநியோகம் செய்யப்படும் என்றும், ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் ஒரு கப்பல் நாட்டை வந்தடையும் என்றும் லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் அறிவித்துள்ளது.
மாலைத்தீவில் உள்ள கிடங்குகளில் தேவையான எரிவாயு சேமிக்கப்பட்டுள்ளதால், ஏப்ரல் இறுதி வரை உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான கையிருப்பு உள்ளது என்று நிறுவன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நாட்டின் எரிவாயு தேவை
இதேவேளை, அமெரிக்காவிலிருந்து 88,000 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றி வரும் ஒரு கப்பல் நாளை மாலைத்தீவிற்கு வரவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, அதே கொள்ளளவு கொண்ட மற்றொரு கப்பல் ஏப்ரல் 20 அன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நாட்டின் எரிவாயு தேவைகள் எவ்வித இடையூறும் இன்றி பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |