சொந்த மண்ணில் மண்டியிட்டது இலங்கை
இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
இதன்பிரகாரம் 2 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற ஆட்டக்கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது.

கிரிக்கெட் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் தனத முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 312 ஓட்டங்களையும் பாகிஸ்தான் அணி 461 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து தனது இரண்டாம் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 279 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.
இதனையடுத்து 131 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

எனினும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய இமாம் உல் ஹக் பெற்ற 50 ஓட்டங்களின் உதவியுடன் 6 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் வெற்றியை தனதாக்கியது.
பிரபாத் ஜயசூரிய நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன், முதல் இன்னிங்ஸ்சில் தனித்து நின்று போராடி இரட்டை சதத்தை பெற்ற சௌத் ஷகீல் போட்டியின் சிறப்பாட்டகாரராக தெரிவுசெய்யப்பட்டார்.