2009 இறுதி யுத்தத்தின் மறைக்கப்பட்ட பக்கம் - கூட்டு கொலையாளி 1

Sri Lankan Peoples LTTE Leader Sonnalum Kuttram
By Kiruththikan Mar 03, 2023 09:31 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

இந்தியா தமிழீழத்தை எப்போதும் தனது துருப்பு சீட்டாகவே பயன்படுத்தி வந்தது. அந்தவகையில் தான் ஆரம்பத்தில் அதாவது இந்திரா காந்தி காலத்தில் தனது நலன் சார்ந்து ஈழத்தமிழர்களுக்கு இந்தியா உதவிகள் செய்தது.

ஆனால் இந்தியாவிலுள்ள உயர்சாதிகளின் திட்டத்திற்கு ஈழத்தமிழர்கள் இணைங்க மாட்டார்களென்று தெரிந்த பின் நிலைமைகள் வெகுவாக மாறியது. ஈழத்தமிழர்களை கொல்ல இந்திய அமைதிப்படையை (IPKF) அனுப்பியதிலிருந்து நிறைய சொல்லலாம்.

அதேநேரத்தில் தனது நோக்கம் தமிழகத்தில் பலத்த எதிர்ப்பை உண்டாக்கியதை அடுத்து ராஜீவ் காந்தியின் கொலையை காரணமாக காட்டி தமிழீழ மக்களை ஒடுக்கவும் தனது வன்மத்தை மறைக்கவும் அதனை பயன்படுத்தியது.

இலங்கை எவ்வளவு தூரம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இருந்ததுவோ, அதே அளவு இந்திய அரசாங்கமும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது.

ஒரே வித்தியாசம், இலங்கை அரசாங்கத்தை விட, இந்தியா உலக அளவில் தன் ஆளுமையை செலுத்தக் கூடிய நாடாக இருந்தது. ஒரு வேளை இந்தியா விடுதலைப் புலிகளை ஆதரித்திருந்தால், தனித் தமிழீழத் தேசம் மலர்ந்திருக்கும்.

இந்தியா இரண்டு விடையங்களுக்காக அஞ்சியது:

2009 இறுதி யுத்தத்தின் மறைக்கப்பட்ட பக்கம் - கூட்டு கொலையாளி 1 | Sri Lanka War Crimes 2009 India Help

  1. தமிழீழம் விடுதலை அடைந்தால், தமிழ்நாடும் விடுதலைக் கோரும். இது இந்தியாவின் புவிசார் அரசியல் நிலையையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும்.
  2. தமிழீழம் அங்கீகரிக்கப் படாத நாடாக இருந்த காலத்தில், பிற அங்கீகரிக்கப் படாத நாடுகளைக் காட்டிலும், இராணுவம் மற்றும் தொழில் நுட்பத்தில் முன்னேறி இருந்தது. அமைதி காலகட்டத்தில் (2001-2006) தமிழீழம் அடைந்திருந்த வளர்ச்சி இந்திய உயர்சாதியினர்களுக்கு எரிச்சலை கொடுத்தது.

1991 க்கு பிறகு, இலங்கைக்கு பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை இந்தியா தொடர்ச்சியாக அளிக்கத் தொடங்கியது. மூன்றாம் ஈழப் போரின் போது, விடுதலைப் புலிகள் தொடர்ச்சியான பல யுத்தங்களை வென்ற போது, இலங்கை அரசுடன் இராணுவ வர்த்தகத்திலும், நிதியுதவி அளிப்பதிலும் இந்திய அரசாங்கமே முன்னிலையில் இருந்தது.

2018 ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் வாஜ்பாயி இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்க இந்தியா வந்த முன்னாள் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க “நான் இலங்கையின் பிரதமராக இருந்த போது, விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் பலமாக இருந்தது. எங்களின் பொருளாதாரமும் நலிந்திருந்தது. திரு.வாஜ்பாயி அவர்கள் தான் எங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவினார். எங்களுக்கு தேவையான இராணுவ பயிற்சிகளையும் அளித்தார். இந்த உதவிகளாலேயே கடல் புலிகளை எங்களால் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது” என்று கூறினார்.

இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டாபய ராஜபக்ச, “காங்கிரஸ் அரசாங்கத்துடனும், அதன் அதிகாரிகளுடனும் எங்களுக்கு நல்ல உறவு இருந்தது. விடுதலைப் புலிகளை தோற்கடிப்பத்தில் எங்களுக்கு அவர்களின் முழு ஆதரவு இருந்தது” என்று கூறியுள்ளார்.

இலங்கையில் கடைசி கட்ட போரின் போது, இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியே நடைபெற்றது. சோனியா காந்தியின் கட்டுப்பாட்டில் தான் காங்கிரஸின் ஆட்சி இருந்தது.

சோனியா காந்தி

2009 இறுதி யுத்தத்தின் மறைக்கப்பட்ட பக்கம் - கூட்டு கொலையாளி 1 | Sri Lanka War Crimes 2009 India Help

1. இந்தியாவின் நலன்களை இலங்கையில் பாதுக்காக்கவும், பாக்கிஸ்தான் மற்றும் சீனா இலங்கையில் நிலை பெறுவதை தடுக்கவும், விடுதலைப் புலிகளை அழிப்பதும், பிரபாகரனைக் கொல்வதும் மட்டும் தான் ஒரே வழி என்ற சோனியா காந்தியின் நிலைப்பாட்டை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொள்ளவும் செய்தார்.

அமைதி காலத்தின் போது ஈழச் சிக்கலுக்கு இராணுவத் தலையீட்டின் மூலமே முடிவு காண வேண்டும் என்று சோனியா காந்தி விடாப் பிடியாக இருந்தார். இராணுவ உத்திகள், பொதுமக்களை கட்டுப்படுத்துதல், ஊடகங்களை ஒடுக்குதல் அகியவற்றுடன் முற்று முழுதான போரிற்கான அறிவுரைகளை அமைதி காலத்திலும் கூட சோனியா காந்தி இலங்கை அரசாங்கத்திற்கு அளித்து வந்தார்.

கருணா மற்றும் கே.பி ஆகியோர் உட்பட விடுதலைப் புலிகள் தலைமையில் பிளவு ஏற்பட சோனியா காந்தி மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் முக்கிய பங்காற்றினர்.

2. பத்திரிக்கையாளர், சாம் ராஜப்பாவின் கூற்றுப் படி: இலங்கையில் நடைபெறும் இன விடுதலைக்கான போராட்டத்தை இராணுவ நடவடிக்கை மூலம் முடிவு கட்டுவதற்கு இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு பச்சைக் கொடி காட்டியது.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனையும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானையும் கொல்வதற்கு தேவையான அனைத்து இராணுவ உதவிகளையும் அளிக்கத் தயார் என்று சோனியா காந்தி கூறியதாக கொழும்புவில் இருந்து வரும் செய்திகள் தெரிவித்தன.

இந்திய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணன், வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் உட்பட பிரதமர் அலுவலகத்தில் இருந்த பல்வேறு அதிகாரிகள் தேசிய நலனை விட சோனியா காந்தியின் நலனிற்கு முக்கியத்துவம் கொடுத்து, இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு உதவி செய்தனர்.

உலகமே இலங்கையில் நடந்தவற்றை கண்டு கொந்தளித்துக் கொண்டு இருந்த போது, இந்திய அரசாங்கம் மட்டும் அமைதியாக இருந்தது. ராஜபக்சேவும் அவரது கூட்டாளிகளும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்களுக்காக நிறுத்தப்படும் பட்சத்தில், இந்திய அராங்கம் மட்டும் தப்பித்து விட முடியாது.

கருணாநிதி

2009 இறுதி யுத்தத்தின் மறைக்கப்பட்ட பக்கம் - கூட்டு கொலையாளி 1 | Sri Lanka War Crimes 2009 India Help

தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவிற்கு துணை நின்றார். அவரின் அமைதியும் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவும் கேடு விளைவித்தது.

பிரபாகரன் கோரிய உதவிகளை புறம் தள்ளிவிட்டு, தமிழ்நாட்டில் இருந்த விடுதலைப் புலிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து, காங்கிரஸ் கூட்டணிக்கு தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொள்ள மறுத்தார்.

3. Tamil Nadu Coastal Security Group உதவியுடன், இந்திய உளவுத் துறை அமைப்பான RAW 2007 இல், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் செயல்பாட்டையும், விடுதலைப் புலிகள் தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு தப்பி வருவதை தடுக்கவும், ஆயுதங்கள் பெறுவதற்கு தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் வைத்திருந்த தொடர்புகளையும் முடக்கியது.

4. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும், இனப்படுகொலை மற்றும் போர் குற்றத்திற்கு காரணமானவர்களை விசாரிக்க ஐ.நா’வில் தீர்மானம் கொண்டு வரவும் வற்புறுத்தி, தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் 2011 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, மத்திய அரசு செயல்படுத்த போதிய அழுத்தங்களை கருணாநிதி மத்திய அரசிற்கு அளிக்கவில்லை.

ஐ.நா மனித உரிமை அவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்வதில் இந்திய அரசாங்கம் முக்கியப் பங்காற்றியது. அதையும் கருணாநிதி கண்டிக்கவில்லை.

தங்கள் வற்புறுத்தலின் பெயரிலேயே தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டது என்று மன்மோகன் சிங் கடிதம் வாயிலாக கூறிய பிறகும் கூட கருணாநிதி அமைதி காத்தார்.

5. அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்புப் பட்டியலில் வைப்பது, ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாப்பது, கனடாவின் வலதுசாரி கட்சிகளில் உள்ள இந்தியர்களை கொண்டு விடுதலைப் புலித் தலைவர்களை தடை செய்யும் தீர்மானத்தைக் கொண்டு வருவது போன்ற அரசியல் ரீதியான நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் செய்தது.

6. இராணுவ ரீதியில், இலங்கை அரசாங்கத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகவும், போர் விமானங்கள், தாக்குதலுக்கு தேவையான ஹெலிகாப்டர்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை இந்தியா அளித்தது.

அமைதி காலத்தில் மட்டும் இந்திய அரசாங்கம்: JY11 3D ரேடார் கருவிகளை இலங்கை அரசாங்கத்திற்கு 5 மில்லியன் டொலருக்கு விற்றது; இரண்டு Indra IN-PC-2D ராடார் கருவிகள், இலவசமாக அளித்தது; 13 MG போர் விமானங்கள், நூற்றுக்கணகான போர்வீரர்கள் அணியும் உடுப்புகள், மற்றும் தாக்குதலுக்கு தேவையான ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை வழங்கியது.

7. இந்தியாவின் செயற்கைக் கோள்களை பயன்படுத்திக் கொள்ள இலங்கை இராணுவத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் மூலமும், தானியங்கி விமானங்கள் (Drone) மூலமும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை இலங்கை இராணுவம் கண்காணித்தது.

கடல் புலிகளின் கலன்கள் மீது, ஆயுதம் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது இந்திய விமானப் படை தொடர் தாக்குதல்களை நடத்தியது. விடுதலைப் புலிகள் ஆயுதங்களை இறக்குமதி செய்வதை, விடுதலைப் புலிகள் தலைவர்கள் தப்பிச் செல்வதையும் தடுக்க இந்திய கப்பற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்திய கப்பல் படை, விடுதலைப் புலிகளின் கிடங்குகளாக பயன்படுத்திய பத்து கலன்களை (floating warehouses) அழித்தது. இதனால் கடற் புலிகள் அமைப்பு மிகவும் பலவீனம் அடைந்தது.

கடற்பகுதிகளை கண்காணித்து, சேகரித்த தகவல்களை இலங்கையின் கடற்படைக்கு அளித்தது, கடற் புலிகளின் கலன்கள் மீது விமானப் படைத் தாக்குதல்களையும் நடத்தியது. இந்தியாவில் இராணுவ பயிற்சி பெறும் முதன்மை நாடாக இலங்கை இருந்தது.

2008 இல், இலங்கை இராணுவத்திற்கு வருடாந்திர பயிற்சிகளை அளிக்கவும் இந்தியா ஏற்பாடுகள் செய்தது. இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர், வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ராஜபக்சேவின் சகோதரர்கள் மற்றும் அவர்களின் செயலாளர்கள் அதிகாரப்பூர்வமாக அல்லாமால், தனிப்பட்ட முறையில் தகவல்களை பறிமாறிக்கொள்வதற்கான முறைமைகள் ஏற்படுத்தப்பட்டன. 2007-2009 கால கட்டத்தில் இவர்கள் பல முறை சந்தித்துக் கொண்டனர்.

8. இலங்கையின் கடற்படை தளபதியான வசந்தா கரணகோடா “விடுதலைப் புலிகளின் சரக்குக் கப்பல்கள் இந்திய கப்பற்படை அளித்த தகவல்களை கொண்டு ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டன. இதன் காரணமாக விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு எல்லா வகையான பொருட்களும் கொண்டு செல்லப்படுவது தடுக்கப்பட்டது. இதனால் எங்களால் வேகமாக முன்னேற முடிந்தது. இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் புலிகள் கட்டியமைத்திருந்த தேசத்தை எங்களால் அழிக்க முடிந்தது.” என்று கூறியுள்ளார்.

இலங்கை அரசு மீதான சர்வதேச போர் குற்றங்களை விசாரிக்க ஐநா மனித உரிமைகள் ஆணையம் எடுக்கும் முயற்சிகளை இந்திய அரசாங்கம் இன்றளவும் விடாப்பிடியாக தடுத்து வருகிறது.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ் நயினாதீவு 5ம் வட்டாரம், Jaffna, Markham, Canada

02 Sep, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, சிட்னி, Australia

02 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
32ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Pontault, France

06 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

புதுமாத்தளன், இறம்பைக்குளம்

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, பிரித்தானியா, United Kingdom

05 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Weston, Canada, Whitchurch, Canada

03 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024