எரிவாயு பற்றாக்குறைக்கு தீர்வு! லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கைக்குச் சொந்தமான 42,000 மெட்ரிக் டன் எரிவாயு இருப்பு தற்போது மாலைதீவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்ய இந்த அளவு போதுமானது என்று நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த கையிருப்பை கூடிய விரைவில் நாட்டிற்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு கப்பல்கள்
மேலும், மே மாதத்திற்குத் தேவையான 33,000 மெட்ரிக் டன் எரிவாயுவை கொண்ட ஒரு கப்பல் ஏப்ரல் 25 ஆம் திகதி நாட்டிற்கு வந்து சேரும் என குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், 7,000 மெட்ரிக் டன் எரிவாயுவை கொண்ட மற்றுமொரு கப்பல் ஏப்ரல் 4 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக லாக்ஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நலிந்த குருகுலசூரிய கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 22 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்