இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகளின் தனித்துவம்..!
இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகள் ஒரு சதம் கூட செலவு செய்யவில்லை என்றும் மாறாக இலங்கை அரசு கோடிக்கணக்கில் செலவு செய்ததாகவும் உலக வாழ் புலம்பெயர் தமிழர் அமைப்பின் பிரதிநிதி நிமலன் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்களோ அல்லது தமிழினமோ நசுக்கப்பட்டால் ஒரு தலைவர் அல்ல 100 தலைவர்கள் உருவாகுவார்கள் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்
சுதந்திரம் மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஒரு தலைவர் அல்ல ஒரு இலட்சம் தலைவர்களும் உருவாகுவார்கள். ஒவ்வொருத்தரும் தலைவர்களாகுவார்கள். அந்த இனத்திற்குள் இருந்து 1000 தலைவர்களும் வருவாகுவார்கள்.
நாங்கள் அடுத்த தலைவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
இன்று தமிழர்களின் போராட்டம் எப்படி உலகம் அறியப்பட்டது? அதாவது தமிழினம் 18 வீதம் கொண்ட சிறிய இனம். ஆனால் மிகப்பெரிய அரசாங்கத்திற்கு எதிராக மிகப்பெரிய யுத்தம் எப்படி முன்னெடுக்கப்பட்டது என்பது உலகத்திற்கே தெரியும்.
யுத்தத்தை நடத்த இலங்கை அரசாங்கம் 20 கோடி செலவழித்தது. ஆனால் தமிழ் அமைப்புக்களோ அல்லது விடுதலைப் புலிகளோ ஒரு சதம் கூட செலவழிக்கவில்லை.
இது ஒரு மக்கள் போராட்டம். இது பணத்திற்கோ அல்லது டீலுக்கோ உருவான யுத்தம் அல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.
