கருணா, சவேந்திர சில்வா மீதான பிரித்தானிய தடை: அநுர அரசு வெளியிடப்போகும் அறிவிப்பு!
மூன்று முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் ஒரு முன்னாள் பிரதி அமைச்சருக்கு எதிராக பிரித்தானியா விதித்த தடை குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்று (26) பிற்பகல் அறிவிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான நிலைப்பாட்டை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான வெளியுறவு அமைச்சு அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த இதனை கூறியுள்ளார்.
தடை விதிக்கப்பட்டவர்கள்
இலங்கையின் போரின் போது மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் கூறப்படும் மூன்று முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் ஒரு முன்னாள் துணை அமைச்சர் மீது தடைகளை விதிப்பதாக பிரித்தானியா நேற்றுமுன்தினம் (24) அறிவித்தது.
அதன்படி, முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவர் (ஓய்வு பெற்ற) ஜெனரல் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொட, முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜெயசூர்யா மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அம்மான், ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் கிழக்குத் தலைவராக இருந்தவர் ஆகிய நான்கு நபர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
