மைத்திரி ஆட்சி காலத்தில் வலுவிழக்க செய்யப்பட்ட புலனாய்வு துறைகள்
தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாம் கதைப்பதென்றால் 2015 ஆம் ஆண்டிலிருந்து சில தகவல்களை வெளியிட்டாக வேண்டும் என மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், 2015 ஆம் ஆண்டு முதல் எமது நாட்டின் அனைத்து புலனாய்வு துறைகளும் வலுவிழக்க செய்யப்பட்டன என பகிரங்க கருத்தொன்றையும் முன்னவைத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தேசிய பாதுகாப்பு
இன்று நாட்டில் நிலவும் தேசிய பாதுகாப்பு சூழலில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இருந்திருந்தால் நாடு முழுதும் போ் இடம்பெற்றிருக்கும்.
மகிந்த ராஜபக்ச காலத்தில் நாட்டின் முக்கியமான அமைச்சசுக்கள் ராஜபக்சர் கும்பத்திடம் இருந்ததால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்ற சிலர் குற்றம் சாட்டினர்.
அனைத்தும் எம்மிடம் இருந்ததாலே நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவால் முடியாததை மேலும் ரத்வத்தையால் முடியாததை நாம் செய்துள்ளோம்.
முடியாதவர்கள் கூறும் காரணங்கள் தான் இவை.
பின்னர் தேசிய பாதுகாப்பு வலுவிழக்க செய்யப்பட்டன.அதன் ஒரு பெரும் நிகழ்வே ஈஸ்டர் குண்டு தாக்குதலாகும்.
பல தகவல் தெரிவிக்கப்பட்டும், கண்டு கொள்ளாத நிலைமையும் அந்த தகவல்களின் உண்மை தன்மையில் ஏற்பட்ட சந்தேகங்களும் தகவல்களை தட்டிவிட்டு போவதற்கான காரணமாகலாம்.
புலனாய்வு துறையின் வலுவிழப்பு
அதேபோல் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த சமயத்திலும் புலனாய்வு துறையினரால் வழங்கப்பட்ட பல தகவல்களை அவருடன் இருந்த அதிகாரிகள் நம்பிக்கை கொள்ளவில்லை.
அதற்கு புலனாய்வு துறையின் வலுவிழப்பும் நம்பகத்தைன்மையில் ஏற்பட்ட சந்தேகம் தான் காரணமாகலாம். அத்தோடு அரகலய போராட்டத்தின் போது தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கும் இவை காரணங்களாக இருந்திருக்கலாம். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திலும் அவ்வாறே இருக்கிறது.
இதனாலேயே மோட்டார் சைக்கிளில் வந்த திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட கும்பல்கள் இன்று ஸ்கூட்டர்களில் வந்தே துப்பாக்கி பிரயோகங்களை செய்கின்றனர்.
புலனாய்வு தகவல்கள் கிரமாக கிடைக்கும் என்றால் தொடர் சூட்டு சம்பவங்கள் நடப்பதற்கான சூழலை முறியடித்திருக்கலாம்’’ என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
