கோட்டாபய உட்பட ராஜபக்சக்களை சிறையில் அடைக்க விரும்பும் மக்கள்! கடும் கோபத்தில் போராட்டக்காரர்கள்
இலங்கையின் அமைதியை கெடுத்த ராஜபக்சர் அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும் என்று காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 09 போராட்டத்தின் விளைவால் பதவி விலக போவதாக அறிவித்து இருந்த கோட்டாபய ராஜபக்ச இன்று (13) அதிகாலை விமான படை உதவியுடன் மாலைதீவிற்கு தப்பி சென்றுள்ளார்.
போராட்டகாரரின் வேண்டுகோள்
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நாங்கள் இதனை விரும்பவில்லை, கோட்டாபயவை நாட்டிலேயே வைத்திருக்க நாங்கள் விரும்புகின்றோம். அவர்களை திறந்த வெளிச் சிறையில் அடைக்க விரும்புகின்றோம், அவர்கள் அங்கே விவசாய நடவடிக்கையில் ஈடுபட முடியும், கொள்ளையிடப்பட்ட எங்களுடைய பணம் எங்களுக்கு மீண்டும் வேண்டும் என்று காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் கூறியுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ச மாலைதீவிற்கு தப்பிச் சென்றது மிகவும் மோசமான விடயம் என்றும் இங்கு போலவே அங்கும் ஊழல்கள் நிறைந்துள்ளன என்றும் மாலைதீவில் இருந்து அண்மையில் இலங்கைக்கு வந்த இளைஞர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.