லண்டனுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர் உட்பட புலம்பெயர் தொழிலதிபர் கைது!

London Sri Lankan Peoples United Kingdom India
By Dilakshan Jan 21, 2026 08:17 AM GMT
Report

பெங்களூரு கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கழிப்பறையில் பிரித்தானிய விமானத்தில் செல்வதற்கான நுழைவுச் சீட்டை ரகசியமாக வழங்கி, இலங்கையர் ஒருவரை நாட்டை விட்டு கடத்த முயன்றதற்காக புலம்பெயர் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் ஜனவரி 18 ஆம் திகதி பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் இந்திய காவல்துறையின் காவலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் சட்டவிரோதமாக லண்டனுக்கு பயணம் செய்த இலங்கையரான ஷருசன் குணசேகரன் என்ற நபர் அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நந்தன குணதிலக்கவின் மரணத்தில் வலுத்துள்ள சந்தேகம்!

நந்தன குணதிலக்கவின் மரணத்தில் வலுத்துள்ள சந்தேகம்!


பாதுகாப்பு சோதனைகள்

மேற்கு லண்டனைச் சேர்ந்த 52 வயதான தொழிலதிபர் கந்தையா ராஜகோபால், பிரித்தானியாவுக்குள் நுழைய செல்லுபடியாகும் விசா இல்லாததால் ஷருசன் குணசேகரன் என்ற இலங்கையரிடம் தனது விமான நுழைவுச் சீட்டை கொடுத்துள்ளார்.

லண்டனுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர் உட்பட புலம்பெயர் தொழிலதிபர் கைது! | Sri Lankan Who Tried To Jump To Uk Arrested

இதன்போது, சுற்றுலா விசாவில் இந்தியா சென்றிருந்த கந்தையா, லண்டனுக்கு விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தை முன்பதிவு செய்திருந்தார், அதே நேரத்தில் ஷருசன் சிங்கப்பூருக்கு இண்டிகோ விமானத்தை முன்பதிவு செய்திருந்தார். 

விமான நிலைய பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு இருவரும் முனையத்தில் உள்ள ஒரு கழிப்பறையில் சந்தித்து விமான பற்றுச்சீட்டுகளை மாற்றிக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கந்தையாவின் நுழைவுச் சீட்டை பயன்படுத்தி சாருசன் லண்டனுக்குச் சென்றிருந்தாலும், விமான நிலைய வளாகத்தில் கந்தையா சுமார் எட்டு மணி நேரம் சந்தேகத்திற்கிடமாக இருப்பது மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரின் கவனத்திற்கு வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இலங்கையர்

குடிவரவு அதிகாரிகள் விசாரித்தபோதும், விமான நிறுவனத்திடமிருந்து வந்த தகவல்களை உறுதிப்படுத்தியபோதும், கந்தையாவின் இருக்கையில் மற்றொரு நபர் பயணம் செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

லண்டனுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர் உட்பட புலம்பெயர் தொழிலதிபர் கைது! | Sri Lankan Who Tried To Jump To Uk Arrested

அதன்போது, சாருசன் லண்டனுக்கு பயணிக்க உதவ திட்டமிட்டதாகவும், பின்னர் அவர் இலங்கைக்குத் திரும்புவதற்காக ஒரு நுழைவுச் சீட்டை முன்பதிவு செய்ததாகவும் அவர் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்திய அதிகாரிகள் வழங்கிய தகவலின் பேரில், பிரித்தானிய விமான நிலைய அதிகாரிகள் சாருசனை வந்தவுடன் கைது செய்து, இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

30 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வரும் கந்தையா, 2012 ஆம் ஆண்டு திருகோணமலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாகவும், குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், தற்போது அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

விகாரைகளில் கை வைக்க வேண்டாம் - ரணில் NPP அரசுக்கு எச்சரிக்கை

விகாரைகளில் கை வைக்க வேண்டாம் - ரணில் NPP அரசுக்கு எச்சரிக்கை

கனடா PR குடியேற்ற திட்டத்தில் அதிரடி மாற்றம் - அரசின் அறிவிப்பு

கனடா PR குடியேற்ற திட்டத்தில் அதிரடி மாற்றம் - அரசின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025