சென்னையில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்
சென்னை கோயம்பேட்டில் தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தகராறில் இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு காவலடதுறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வழக்கில் தொடர்புடைய பாலகுரு, அவருடைய நண்பர் சுமன் சக்திவேல் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காரில் அரசியல் கட்சி கொடி
இவர்கள் விபத்தினை ஏற்படுத்திய காரில் அரசியல் கட்சி கொடி கட்டப்பட்டு இருந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதான யான்சி என்ற இளம்பெண்,இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், தோழியை பார்ப்பதற்காக சென்னை வந்த யான்சி, இரவில் கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்று நடனமாடியபோது மற்றொரு தரப்பினருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இருதரப்பினரையும் பவுன்சர்கள் வெளியேற்றிய நிலையில், சாலையில் வந்து இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற யான்சி மீது மற்றொரு தரப்பைச் சேர்ந்த குழுவினர் காரை வேகமாக ஏற்றிகொலை செய்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
[VTBHBFW ]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |