இலங்கை பெண்கள் வெளிநாடு செல்லல் - வெளியானது அறிவிப்பு
Sri Lanka
United Arab Emirates
By Sumithiran
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டு தொழில் பிரிவுகளுக்கு தொழிலாளர்களாக இலங்கைப் பெண்கள் செல்வதற்கான பதிவு தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், வீட்டு பணிப்பெண்கள் மற்றும் துப்புரவு சேவைகள் தொடர்பான பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்
இதேவேளை வேலை வாங்கி தருவதாக கூறி இலங்கையில் இருந்து பெண்களை சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று ஓமானில் அவர்கள் விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி