காஸாவில் உள்ள இலங்கையர்களுக்கு பேராபத்து
Sri Lanka
Israel-Hamas War
Gaza
By Jaso
இஸ்ரேல் பாலஸ்தீன மோதலை அடுத்து காஸா பகுதியில் சிக்கியுள்ள இலங்கையர்களை விடுவிப்பதற்கான அனைத்து இராஜதந்திர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்ட போதிலும், எகிப்து குடியேற்றவாசிகளை ரஃபா எல்லைக்குள் நுழைய அனுமதிக்காதது பிரச்சினையாக மாறியுள்ளது.
இந்த இலங்கையர்களை எகிப்திற்குள் அனுமதிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளை தாம் ஒருபோதும் கைவிடப் போவதில்லை என இலங்கைக்கான பாலஸ்தீனத் தூதுவர் பென்னட் குரே தெரிவித்துள்ளார்.
எவ்வளவு விரைவில் எகிப்துக்கு அனுப்ப முடியுமோ
இலங்கையர்கள் உயிருக்கு ஆபத்தில் இருப்பதாகவும், செஞ்சிலுவை சங்கம் அவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவை வழங்கியதாகவும், ஆனால் இலங்கையர்கள் உணவு மற்றும் தண்ணீரைக் கேட்கவில்லை, அவர்களை எவ்வளவு விரைவில் எகிப்துக்கு அனுப்ப முடியுமோ அதனையே கேட்கின்றனர் என அவர் தெரிவித்தார்.
