சிவனொளிபாதமலை யாத்திரிகளுக்கு காவல்துறை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
சிவனொளிபாதமலை யாத்திரைக் காலத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை கொண்டு வரும் நபர்கள் மற்றும் குழுக்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக ஹட்டன் காவல்துறை அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார்.
சிவனொளிபாதமலை யாத்திரை ஒரு புனிதமான பயணம், அது சுற்றுலா அல்ல என்றும், பக்த்தர்கள் கோயிலுக்குச் செல்லும்போது மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேட நடவடிக்கை
மதுபானம் அல்லது போதைப்பொருட்களை சிவனொளிபாதமலை விகாரைக்கு கொண்டு வருவது ஏற்புடையதல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஹட்டன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களும் யாத்திரையின் போது மதுபானம் அல்லது போதைப்பொருளை எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பக்தர்களின் வாகனங்களைச் சோதனையிட அவசரச் சாலைத் தடுப்புகளும் அமைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
