இலங்கை வாழ் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் அறிவிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மரநடுகை நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ரஜனிகாந் தலைமையில் இந்நிகழ்வானது இன்று (12) மட்டக்களப்பில் நடைபெற்றது.
மேலும், இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் வசந்தராஜா மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் மாவட்ட நிருவாகிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மர நடுகையும் கூட்டமும்
இதன்போது சூழலுக்கு நன்மைதரும் நிழல் மரங்களும் நடப்பட்டதையடுத்து கூட்டமும் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் மனித உரிமைகள் செயற்பாடுகள் தொடர்பாகவும், அமைப்பின் எதிர்கால திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இன மத மொழிகளைக் கடந்து இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் தமது அமைப்பு தொடர்ந்தும் அர்பணிப்புடன் செயற்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் தனது உரையின்போது தெரிவித்தருந்தார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா
