உடனடியாக நிவாரணம் வழங்கவில்லையெனில்..... அரசாங்கத்திற்கு தனியார் பேருந்து சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாக தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால், சுமார் 50000 பேருந்து ஊழியர்களும், 11000 பேருந்து உரிமையாளர்களும் எந்த வருமானமும் இன்றி மிகவும் மோசமான நிலைகுத் தள்ளப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் பேருந்து ஊழியர்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்காவிட்டால், நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு நீக்கப்பட்டாலும் பேருந்துகளை இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்விளைவாக, அவர்களின் குடும்பத்தினர் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அரசு இது குறித்து கவனம் செலுத்தி பஸ் ஊழியர்களுக்கு நிவாரணப் பொதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் ஊரடங்கு நீங்கிய பின்னர் பேருந்துகள் இயங்காது என்றும் தெரிவித்துள்ளார்.