இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி! இந்திய மத்திய அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை
இலங்கையின் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம், அனைத்து கட்சிகளின் கூட்டம் ஒன்றை நடத்தவேண்டும் என்று காங்கிரஸின் மூத்த தலைவர் அட்ஹிர் ரஞ்சன் சௌத்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பை கருதி இந்த கூட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி கூட்ட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். அதேநேரம் இலங்கையுடன் சிறந்த உறவை பேணுவதற்கான செயற்பாட்டை இந்திய அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
இலங்கையில் தொடரும் பிரச்சினைகள் காரணமாக அகதிகள் இந்தியாவுக்கு வரக்கூடும் என்றும் சௌத்ரி குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இலங்கைக்கு இந்திய அரசாங்கம் வழங்கி வரும் உதவிகள் குறித்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு அலுவல்கள் குழுவை அழைத்து தகவல்கள் பகிர்ந்துகொண்டார்.
இந்தக்குழுவில் இந்திய காங்கிரஸின் ராகுல் காந்தியும் உள்ளடங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 13 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்