ஏழு ஈஸ்டர்கள் கண்ணீரைச் சிந்தியும் இன்னும் சூத்திரதாரி தென்படவில்லை...
ஏப்ரல் 2026 – 2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தேசம் இன்னும் மன அதிர்ச்சியிலிருந்து முழுமையாக மீளவில்லை.
ஈஸ்டர் ஞாயிறு காலையில், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கொண்டாடுவதற்காக தேவாலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 269 அப்பாவி மக்கள், கொடூர தற்கொலைத் தாக்குதல்களில் உயிரிழந்தனர்.
கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பு புனித செபாஸ்டியன் ஆலயம், மட்டக்களப்பு சீயோன் ஆலயம் ஆகியவற்றுடன், சின்னமன் கிராண்ட், ஷாங்க்ரி-லா மற்றும் கிங்ஸ்பரி உள்ளிட்ட ஹோட்டல்களிலும் குண்டுகள் வெடித்தன.
அந்த நாள், தவக்கால நோன்பை முடித்து, குடும்பத்துடன் ஈஸ்டர் உணவைப் பகிர்ந்துகொள்ள ஆவலுடன் காத்திருந்த பக்தர்களுக்கு கடைசி ஈஸ்டர் ஆகியது.
எச்சரிக்கைகள் புறக்கணிப்பு
தாக்குதலுக்கு முன்னர் பல எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், அப்போதைய யஹபாலன அரசாங்கத்தின் குற்றவியல் அலட்சியம் காரணமாக அவை புறக்கணிக்கப்பட்டதாகவும், “எனக்குத் தெரியாது” என்ற பதிலுடன் தப்பித்துக்கொள்ள முயற்சி செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் தந்தை, தாக்குதல் நாள் காலையில் தேவாலயங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று மகனுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

குறிப்பாக கொச்சிக்கடை ஆலயத்தை குறிப்பிட்ட அந்த எச்சரிக்கை, பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.
இவ்வாறன நிலையில் இந்த ஏழாம் ஆண்டு நினைவில், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில எழுதிய “ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடுதல்” என்ற புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஒன்றரை ஆண்டுகால ஆய்வுக்குப் பிறகு எழுதப்பட்ட இந்த நூல், தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த “சூத்திரதாரி”யை கண்டறிய முயல்வதாக ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற தீர்ப்பு
2023 ஜனவரி 12 அன்று உயர்நீதிமன்றம் (பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில்) அரசின் அலட்சியத்தால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக தீர்ப்பளித்தது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க “பாதிக்கப்பட்டோர் நிதியம்” அமைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், முன்னாள் ஜனாதிபதி, காவல்துறைத் தலைவர், பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்டோருக்கு குறிப்பிட்ட தொகைகளை செலுத்த உத்தரவிட்டது.

இருப்பினும், உண்மையான சூத்திரதாரியை கண்டுபிடிப்பதும், முழுமையான நீதியை வழங்குவதும் இன்னும் நிலுவையிலேயே உள்ளது.
இந்த கொடூரம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இரட்டை துயரத்தை எதிர்கொள்ள்ள வைக்கிறது.
அரசியல் கட்சிகள் அவர்களின் துயரத்தை தங்கள் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவதாகவும், உண்மையான நீதி இன்னும் கிடைக்கவில்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது.
சொல்லப்போனால் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும், ஈஸ்டர் தாக்குதலின் காயங்கள் இலங்கை மக்களின் நெஞ்சங்களில் இன்னும் ஆறாத நிலையிலேயே உள்ளன.
“மனித நீதிக்கு வரம்பு உண்டு. தெய்வீக நீதியை விண்ணுலகிடம் விட்டுவிடுவது சிறந்தது”
பிள்ளையானின் வதைமுகாமில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட பேராசிரியர் ரவீந்திரநாத்! CID விசாரணையில் அம்பலம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |