பொருளாதாரப் போரை வெற்றிகொள்ளக்கூடிய மொட்டுக்கட்சியின் அதிபர் வேட்பாளர்: வெளியாகவுள்ள அறிவிப்பு
நாட்டின் பொருளாதாரப் போரை வெற்றிகொள்ளக்கூடிய ஒருவரை அதிபர் வேட்பாளரைாக களமிறக்குவோம் என சிறிலங்கா பொதுஜன பெரமுன(Spp) கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
அதிபர் வேட்பாளர் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,"சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சி இதுவரை எந்தவொரு தேர்தலிலும் தோற்றது கிடையாது.
அதிபர் தேர்தல்
அதிபர்த் தேர்தலில் களமிறங்கக் கட்சி சார்பில் சில வேட்பாளர்கள் தயார் நிலையிலேயே உள்ளனர். உரிய நேரம் வரும்போது வெற்றி வேட்பாளரைக் களமிறக்கி அதிபர் தேர்தலிலும் வெற்றி நடைபோடுவோம்.
அதிபர் வேட்பாளர் தொடர்பில் கருத்துக் கூறுவதில் இருந்து விலகி இருக்குமாறு கட்சி தீர்மானித்துள்ளது.
எனவே, தற்போதைய சூழ்நிலையில் வேட்பாளர் பெயரை, கட்சி முடிவை மீறி அறிவிக்க முடியாது. மகிந்த ராஜபக்ச பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியவர்.
மொட்டுவின் வேட்பாளர்
அப்போது தம்மிக்க பெரேரா(Dhammika Perera), மகிந்த ராஜபக்சவின்(Mahinda rajapaksa) செயலாளராகவும், முதலீட்டுச் சபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
நாட்டை மீட்கக்கூடிய தலைவராகவே மகிந்த ராஜபக்சவை அன்று மக்கள் தெரிவு செய்தனர். அவர் மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதுடன் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-md.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 3 நாட்கள் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)