இலங்கைக்கு சீனா உதவிக்கரம்
இலங்கைக்கு சீனா 2.5 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளதாக சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கோகன (Palitha Kohona) தெரிவித்துள்ளார்.
நாடு பொருளாதார நெருக்கடியால் பாரிய பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், சீன அதிகாரிகள் இதற்கான உறுதியை அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இலங்கை பெய்ஜிங்கில் இருந்து 1 பில்லியன் டொலர் கடனைப் பெற உள்ளது. இதன் மூலம் ஜூலையில் நிலுவையில் உள்ள சீனக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியும்.
அத்துடன் ஆடை ஏற்றுமதித் தொழிலுக்குத் தேவையான பொருட்களை 1.5 பில்லியன் டொலர் கடன் வரியில் கொள்வனவு செய்யமுடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சீனாவிடம் இருந்து கடன் உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, அண்மையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.