இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட நெருக்கடிகளின் தொடர்ச்சியாக இவ்வருடம் உணவுப்பற்றாக்குறை, வெளிநாட்டுக்கையிருப்பு வீழ்ச்சி, உயர் கடன் இடர் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு இலங்கை முகங்கொடுக்கக் கூடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரம் தொடர்பான அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 2022 ஆம் 2022 ஆம் ஆண்டின் அறிக்கையில் உலக பொருளாதார நிலைமை குறித்து சர்வதேசம் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை பாரிய அளவில் உள்ள போதிலும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் மத்திய வங்கிகள் கடந்த ஆண்டின் இரண்டாம் அரையாண்டு பகுதியில் வட்டி விகிதத்தை அதிகரித்தன.
இதன் காரணமாக நிதி மற்றும் விலைகளின் ஸ்திரத்தன்மையினை பேணுவது கடினமான விடயமாக இந்த நாடுகள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியினை 64 சத வீதமான இலங்கை, பூட்டான் மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.