இலங்கை மக்களுக்கு விரைவில் மூன்றாவது டோஸ்
srilanka
people
third doss
By Jaso
இலங்கையில் வேகமாக பரவும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் வேகமும் முழுவீச்சில் இடம்பெற்று வருகிறது.
அத்துடன் தற்போது 20 தொடக்கம் 30 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்னும் சில மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸினை மக்களுக்கு அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஜி.விஜேசூரிய இதனைத் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.