ஹிட்லர் முசோலினி போன்று ஆட்சியமைக்க முற்படும் ராஜபக்ஷக்கள்!

JVP government press meet sri Lanka bimal ratnayake
By Kalaimathy Jul 01, 2021 12:19 PM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

கடுமையான சட்டங்கள் ஊடாக இலங்கையை ஹிட்லர் மற்றும் முசோலினியின் ஆட்சியைப் போல் முன்னெடுக்கவே தற்போதைய ராஜபக்ஷாக்களின் அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.

எனவே பயங்கரவாத தடைசட்டம் போன்றவை நீக்கப்பட வேண்டும் என கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

கடந்த ஜூன் 18 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சரான அரச தலைவர் கோட்டாய ராஜபக்ஷ, அமைச்சர்களான தினேஷ் குணவர்தன மற்றும் அலி சப்ரி ஆகியோரால் பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான கூட்டு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதோடு, இது தொடர்பில் ஆராய அமைச்சரவை உபகுழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

ஸ்ரீலங்காவில் சிவில் உரிமைகள் மீறப்படல், பயங்கரவாத தடைசட்டம் அரசாங்கத்தால் முறைகேடாக பயன்படுத்தப்படல் என்வற்றை மேற்கோள் காட்டி ஸ்ரீலங்காவிற்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிசலுகையை நீக்குவதற்கான யோசனை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னரே இவர்களுக்கு பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தோன்றியுள்ளது. இவ்வாறான நிலையில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதாகத் தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாட்டின் பிரஜையொருவர் சிந்தித்தால் கூட அவருக்கு தண்டனை வழங்கப்படக் கூடிய நிலைமையை தோற்றுவித்துள்ளது.

ஹிட்லர் ஆட்சியிலேயே இவ்வாறான கடும் சட்டங்கள் காணப்பட்டன. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகக் கூறி ஆட்சியை கைப்பற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யுத்தத்ததின் போது இல்லாத சட்டங்களைக் கூட தற்போது நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தி அதிகூடிய அரசியல் இலாபத்தைப் பெற்றுக்கொண்ட அரசியல்வாதி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ஆவார்.

ஆனால் அதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு இது வரையில் அவர் எடுத்துள்ள புதிய முயற்சிகள் என்ன? தாக்குதல் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ளமையால் பேராயர் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தரப்பினரை திருப்திப்படுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த அமர்வின் போது ரிஷாத் பதியுதீன் தொடர்பில் கேள்வி எழுப்பிய பின்னர் தான் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்படுமா? இவ்வாறு அரசியல் தேவைகளுக்காக தண்டனை வழங்கும் செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021