தற்போது நிலைமை மாறிவிட்டது! நாமல் வெளியிட்ட தகவல்
இளைஞர்கள் ஓவியம் வரைந்த போது கொரோனா இருக்கவில்லை கடந்த இரண்டு ஆண்டுகள் அரசாங்கத்திற்கும் மிகவும் சவால் நிறைந்த ஆண்டுகளாக இருந்தன. அடுத்த ஆண்டியில் சவால்களை வென்று நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்ல எதிர்பார்த்துள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரச தலைவருக்கான தேர்தலின் பின்னர் இளைஞர்கள் சுவர்களில் ஓவியங்களை வரையும் போது நாட்டிற்குள் கொரோனா என்ற தொற்று நோய் இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
தற்போது நிலைமை மாறியுள்ளது. வீட்டில் இருந்து வெளியில் செல்லும் போது கூட முகக்கவசத்தை அணிந்து செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசிகளை வழங்கியதன் காரணமாகவே இப்படியேனும் வெளியில் செல்ல முடிந்துள்ளது.
இலங்கையில் மாத்திரமல்ல தற்போது சர்வதேச ரீதியிலும் இளைஞர்கள் ஏமாற்றத்துடனேயே இருக்கின்றனர். கொரோனா காரணமாக அவர்களுக்கும் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகள் அரசாங்கத்திற்கும் மிகவும் சவால் நிறைந்த ஆண்டுகளாக இருந்தன. அடுத்த ஆண்டியில் சவால்களை வென்று நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்ல எதிர்பார்த்துள்ளதாகவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
You May Like This