நாட்டில் இரண்டு வாரங்களில் ஏற்படவுள்ள பாரிய ஆபத்து!
இலங்கையில் நாள் ஒன்றுக்கு 65 லட்சம் கிலோ கிராம் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதனை ஒரு போதும் தவிர்க்க முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி மற்றும் நெல்லுக்கு இடையே அரசாங்கம் கடுமையான சிக்கலை உருவாக்கியுள்ளதனால் நாட்டில் பாரிய அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாட்டின் விளைவாகவே இந்த முடிவை நாங்கள் பார்க்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாடு திறக்கப்பட்டவுடன் இந்த நிலைமை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து பொருட்களும் பாரியளவு விலை அதிகரித்துள்ளது. எனினும் நெல்லுக்கு தேவையான கட்டணத்தை அரசாங்கம் செலுத்துவதில்லை.
இதனால் பாரிய அநீதிக்குள்ளாகியுள்ள விவசாயிகளால் நெல் விவசாயம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அரிசி உற்பத்தி தடைப்பட்டுள்ளதால், நூற்றுக்கு 50 வீதம் அரிசி உற்பத்தி தடைப்பட்டுள்ளது. முடக்கநிலை தளர்த்தப்பட்டவுடன் உணவகங்கள் திறக்கப்படும். எனவே அரிசிகளின் தேவையும் அதிகரிக்கும் னவும் அவர் தெரிவித்துள்ளார்.